Tuesday, November 11, 2008

இரத்த தான முகாம்

அல்லாஹ்வின் பெயரால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் நடத்தும்...
ஹஜ் பிரயாணிகளுக்கான மாபெரும் இரத்த தான முகாம்!
“இது ரியாத் மண்டலத்தின் 5 ஆவது இரத்த தான முகாம்”
இடம் : கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி- ரியாத், சவுதி அரேபியா.

நாள் : 21-11-2008, வெள்ளி - மதியம் 12.30 முதல் 6.30 மணி வரை (இன்ஷா அல்லாஹ்)
“சென்ற இரத்த தான முகாமில் – (29.8.2008 இல்) கொடுத்தவர்களும் தற்போது கொடுக்கலாம்” தாங்கள் கொடையளிக்கும் இரத்தம், இன்ஷா அல்லாஹ், இவ்வருட ஹஜ் பயணிகளின் தேவைகளுக்கு வழங்கப்பட உள்ளது. தங்கள் பெயர்களை தவறாமல் முன்பதிவு செய்து கொள்வீர்!
தொடர்புக்கு:
நவ்லக் - 0509181890 -- பெய்ஸல் - 0507809247
நியூசெனையா ஆரிஃப் - 0564470687
TNTJ அலுவலகம் - 402 1854
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் என அன்புடன் அழைக்கிறது TNTJ ரியாத்

3 comments:

said...

நியூஸ் இனிமேல்தான் ஆரம்பிக்கிறது. "பர்தாவில் ஷகீலா' என்ற சேதியைக் கேள்விப்பட்டு கொதிப்புற்றுப் போன தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்தின் (த.மு.மு.க) நெல்லை மாவட்டத் தலைவர் பாளை ரஃபீக் பத்திரிகைகளிடம் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:


""அன்றைக்கு வெள்ளிக்கிழமை, நான் தொழுகைக்கு கிளம்பிய நேரம்தான் நடிகை ஷகீலா பர்தா அணிந்து கோர்ட்டுக்கு வந்திருப்பதாக போன் வந்தது. நான் அன்றைக்கு தொழுகைக்கு மட்டும் போகவில்லை என்றால் அவரை செருப்பால் அடித்து கோர்ட்டில் இருந்து ஓடஓட விரட்டியிருப்பேன். பர்தா என்பது முஸ்லீம் பெண்களின் கண்ணியம், கலாச்சாரத்துக்குரிய ஆடை. அந்த ஆடையை இப்படிப்பட்ட ஒரு பெண்மணி தன்னைப் பிறர் கண்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக அணிந்து வருவதென்பது முஸ்லீம்களின் கோபத்தைக் கிளறியிருக்கின்றது. திரையில் பலர் கண்முன்பு பச்சை கொச்சையாக நடிக்கும் ஒரு நடிகை, நீதிமன்றத்திற்கு மட்டும் யோக்கியமாய் பர்தா அணிந்து வருவது என்ன நியாயம்? அடுத்தமுறை இதே பாளை கோர்ட்டிற்கு ஆஜராக வரும்போது அவருக்குப் பாடம் கற்பிப்போம். எங்கள் மகளிரணிப் பெண்கள் திரண்டு வந்து ஷகீலாவிற்கு மறக்க முடியாத பாடத்தைப் புகட்டுவார்கள். அது என்ன என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்''


இதற்கு ஷகீலாவின் பதில் வருமாறு:


""நான் உருது பேசும் ஒரு முஸ்லீம் பெண். நான் பர்தா அணிந்து வருவதில் ஒன்றும் தப்பில்லையே. வறுமை காரணமாகத்தான் சினிமாவில் நடிக்கப் போனேன். கிளாமராக நடிக்க வேண்டும் என்பதற்காக நான் போகவில்லை. படமெடுக்கும்போது டீசண்டாகத்தான் எடுப்பார்கள். படத்தை தியேட்டரில் ஓட்டும்போது இடையில் பிட்டை ஓட்டி விடுவார்கள். அதனால்தான் 2002க்குப் பிறகு மலையாளப் படங்களில் நடிப்பதையே விட்டு விட்டேன். நான் பர்தா அணிவது தப்பு என்று சொல்பவர்கள், நான் பணத்துக்காகக் கஷ்டப்பட்டபோது எங்கே போயிருந்தார்கள்?''
இருதரப்பு வாதங்களும் முடிந்து விட்டன. அடுத்த வாய்தாவுக்காக ஷகீலா கோர்ட்டுக்கு வருவதற்கு முன்னாலேயே இதற்கு தீர்ப்பு என்ன என்று கண்டுபிடித்தாக வேண்டுமே! வழக்கிற்கு உள்ளே போவோம்.

said...

ஒரு மனிதனை நாய் கடித்து விட்டது' என்பது நியூஸ் இல்லை. மனிதன் நாயைக் கடித்து விட்டான் என்றால் அதுதான் நியூஸ் என்பது பத்திரிகை உலகிற்கு வழிகாட்டும் ஒரு பிரபலமான முதுமொழி. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்ற மாதம் வெளியாகியிருக்கும் முக்கியமான நியூஸ்: "பர்தாவில் ஷகீலா!'



···


2003ஆம் ஆண்டு பாளையங்கோட்டை கலைவாணி திரையரங்கில் ஓடிய "இளமைக் கொண்டாட்டம்' என்ற திரைப்படத்தில் சென்சார் செய்யாத காட்சிகளில் ஷகீலா நடித்துள்ளார் என்பதற்காக அவர் மீதும், அவருடன் நடித்துள்ள நடிகர் வினோத் மீதும், திரையரங்க நிர்வாகிகள், ஊழியர்கள் மீதும் தணிக்கை செய்யப்படாத படத்தைத் திரையிடுதல் மற்றும் ஆபாசமாக நடித்துக் கூட்டம் கூட்டுதல் ஆகிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்கு நடைபெற்று வருகின்றது.


இந்த வழக்கின் வாய்தாவுக்காக நெல்லை வந்த ஷகீலா பர்தாவில் மறைந்து கொண்டு வந்த போதிலும் நீதிமன்ற வளாகத்தையே மக்கள் கூட்டத்தால் நிரப்பி விட்டார். நீலத்திரையில் பார்த்த கனவுக்கன்னி கருப்புத் திரைக்குள் ஒளிந்து வந்த போதிலும், தமது கனவுக்கன்னியை நேரில் தரிசிக்கும் பரவசமான வாய்ப்பை அங்கிருந்த மக்கள் இழக்க விரும்பவில்லை. ஷகீலாவின் வாய்தா என்றைக்கு என்ற தேதியை முன்கூட்டியே மோப்பம் பிடித்து, அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்தியைக் கவர் பண்ண காமிராவோடு நிருபர்களும் வந்து விட்டார்கள்.
வழக்கை அக்டோபர் மாதம் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விட்டார் நீதிபதி. தேதியை ஷகீலா குறித்துக் கொண்டாரோ இல்லையோ, நிருபர்களும் ரசிக மகாஜனங்களும் நிச்சயம் குறித்துக் கொண்டிருப்பார்கள்.

said...

அது ஆண்களின் காமவெறியைக் காசாக்கும் சம்பாத்தியம். கேரளாவில் மம்முட்டி, மோகன்லால் படங்களையெல்லாம் தூக்கிச் சாப்படும் அளவுக்கு ஷகீலா படம் வசூலைக் குவித்திருக்கின்றது. இத்தகைய படங்கள் ஆண்களின் "மொழியில்' எடுக்கப்படுவதால், டப்பிங்கே தேவைப்படாமல் எல்லா மாநிலங்களிலும் ஓடியிருக்கின்றது. ஷகீலாவின் படங்களால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? "இளைஞர்களைக் கெடுத்து விட்டது' என்று பொதுவாகச் சொல்லிவிடலாம். உண்மையில் அது பெண்களைத்தான் கெடுத்திருக்கின்றது.


பெண்களின் அங்கங்களை ரைட் ராயலாக மேயும் இளைஞர்களின் பார்வை, அவர்களைக் கூசி ஒதுங்கச் செய்யும் கொச்சையான கமெண்டுகள், பேருந்தின் உரசல்கள், மாணவிகளைத் தின்னும் ஆசிரியர்கள், விசுவாசிகளை வதைக்கும் பாதிரிகள், சிறுமிகளைக் குதறும் அண்டை வீட்டு அங்கிள்கள், பெண்களை வலையில் வீழ்த்த வேண்டிய பட்சிகளாகவும், ரூட் போட்டு மடக்கி ருசிக்க வேண்டிய கறித்துண்டுகளாகவும் கருதும் மாணவர்கள்.. இப்படிப் பலவிதமான மிருகங்களை உருவாக்கி வளர்த்து விட்டிருப்பதில் ஷகீலா படங்களின் பங்கு மகத்தானது. இரைக்கு அலையும் நாயைப் போலவும், கூச்ச நாச்சமற்ற மிருகங்களைப் போலவும் நெல்லை கோர்ட்டில் ஷகீலாவுக்கு கூடிய கூட்டமே, அவரது குற்றத்தின் பரிமாணத்தை விளக்கப் போதுமானது.


ஷகீலாவின் மீது ஏதோ ஒரு போண்டா கேஸ் போடப்பட்டிருக்கின்றது என்பது உண்மைதான். ஆனால் அவருடைய படங்கள் எல்லாம் சென்சார் போர்டு முத்திரையோடுதானே வெள்ளி விழா கொண்டாடியிருக்கின்றன? அவை அனுமதிக்கப்பட்டது ஏன்? அரசியல் சட்டத்தின் மொழியில் சொல்வதென்றால் அது அந்தப் படத்தை இயக்கிய படைப்பாளியின் கருத்துரிமை; ஷகீலாவுடைய கருத்துரிமை. Right to free expression!


அந்த உரிமையைப் பயன்படுத்தி அவர் என்ன "கருத்தை' சொன்னார் என்பது அன்று கோர்ட்டில் கூடிய ரசிகர்களுக்குத் தெரியும். அந்தக் "கருத்தை' காணத்தான் அவர்கள் அங்கே ஓடோடி வந்தார்கள். எனினும் "தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதோ பர்தாவால் மறைப்பதோ தனது தனிநபர் உரிமை என்றும் அதில் யாரும் தலையிட முடியாது' என்றும் கூறுகின்றார் ஷகீலா.


அந்தப் பக்கம் ரபீக்கின் மத உரிமை. இந்தப் பக்கம் ஷகீலாவின் தனிநபர் உரிமை. இரண்டு உரிமைகளுமே தத்தம் வழியில் ஆணாதிக்கத்தை வெறி கொண்டு ஆட வைக்கின்றன. இவற்றுக்கிடையில் நடக்கும் மோதலில் "ஷகீலாவின் பர்தா' கிழிந்து சின்னாபின்னமானாலும் ஆகாவிட்டாலும், ஒரு உரிமை ஏற்கெனவே சிக்கிச் சின்னாபின்னமாகி விட்டது. அதன் பெயர் பெண்ணுரிமை!