Tuesday, May 05, 2009

நன்றிகெட்ட மம கட்சி என்கின்ற தமுமுக

நன்றிகெட்ட மம கட்சி என்கின்ற தமுமுக


நாடு சுதந்திரம் அடைந்தது முதல் புறக்கணிக்கப்பட்டு வந்த முஸ்லிம் சமுதாயம் ஒரளவாவது தலைநிமிர்ந்து நிற்கும் வகையிலும் பல்லாயிரம் மக்கள் உயர்கல்வியும், வேலை வாய்ப்பும் பெறும் வகையிலும் திமுக ஆட்சி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்திருக்கும் போது அதற்கு நன்றி செலுத்துவது நமது கடமையாகும்.

இப்படிப்பட்ட ஒரு நற்செயலை ஆளும் திமுக கட்சி செய்திருப்பதிற்கு பெறும் காரணமாக அமைந்தது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தின் அயராத போராட்டமே ஆகும். உண்மை இப்படி இருக்க, இல்லை இல்லை நாங்கள் தான் முஸ்லிம் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு பெற்று தந்தோம் என மார்தட்டிக் கொள்ளும் தமுமுக என்கின்ற மம கட்சி, அது சொல்வது உண்மையென்றால் தனக்கு ஒரு சீட்டுக் கூட கிடைக்கவில்லை என்பதற்காக நன்றி மறந்து, திமுக விற்கு எதிராக களம் இறங்குகிறது என்றால் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குகின்றது.

மம கட்சி என்கின்ற தமுமுகவின் செயல்பாடுகள் அனைத்தும் அங்குள்ள இரண்டு பேர்களின் நலனுக்காக இயங்கும் கட்சியே அன்றி, முஸ்லிம் சமுதாயத்திற்காக பாடுபடும் கட்சி அல்ல. இதை முஸ்லிம் சமுதாயம் தெளிவாக விளங்கி, இந்த மம கட்சி என்கின்ற தமுமுகவை முற்றிலும் ஒதுக்கி வேண்டும்.

இவர்கள் முஸ்லிம் சமுதாயத்திடம் கீழ்கண்டவாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதாவது, எம்.பி பதவிக்கு யாரு வந்தாலும் கொள்ளை அடிக்கத்தான் போகின்றார்கள், அதனால், யாரோ ஒருவர் வருவதற்கு பதில் நம்மவர் வந்தால் என்ன? என்று வெட்கம் கெட்டு பிரச்சாரம் செய்கின்றனர்.

முஸ்லிம் சமுதாய மக்களே இதற்கு நீங்கள் விலைபோகி விடாதீர்கள்! ஏனென்றால், இவர்கள் நன்றி கெட்டவர்கள் மற்றும் பதவிக்காக எதை வேண்டுமென்றாலும் செய்யக் கூடியவர்கள். மற்றைய சமுதாய மக்கள் பதவிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்ய மாட்டார்கள் ஆனால், இந்த மம கட்சிகாரர்கள் பதவிக்கு வந்தால்? முஸ்லிம் மக்களிடம் மட்டுமே கொள்ளை அடிக்கக் கூடியவர்கள். அதனால் உசாராக இருக்கவும்.

முஸ்லிம் சமுதாய உறவுகளே, நாம் நன்றி கெட்டவர்களா? அப்படி இல்லை என்பதைக் காட்டுவதற்கு இந்த தேர்தலில் திமுக கட்சிக்கு மட்டும் உங்களது வாக்குகளை அளியுங்கள். இந்த நேரத்தில் திமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் நமக்கு துரோகம் இழைத்தவர்களே.

நாம் நன்றியுடையோராக இருப்போம் திமுகவிற்கு ஓட்டுப் போடுவோம்.