Saturday, September 01, 2007

சிறந்த முஸ்லிம்

சகோதரர்களே!

நமது இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் நாம் கடைபிடிக்க வேண்டியவைகளாக் கீழ் கண்டவாறு கூறுகின்றார்கள்:

"நமது எல்லாச் செயல்களும், நம்முடைய எண்ணங்களைப் பொருத்தே அமையும்"

நம்முடைய எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் பட்சத்தில், நமது செயல்களும் தூய்மையாக இருக்கும். ஆகவே, சகோதரர்களே நம்முடைய எண்ணத்தை தூய்மையானதாக ஆக்குவோம்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

"நான் சொல்லாத ஒன்றை வழிபாடாகச் செய்யாதீர்கள்"

ஆம், பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களின் மேன்மையான வணக்கமாக கொள்வது இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறாத ஒன்றை வழிபாடாக ஆக்கிக் கொண்டு வழி கெட்டு இஸ்லாத்திற்கு இழிவு ஏற்படுத்தும் செயலாக ஆக்கிக்கொண்டுள்ளனர்.

இறுதியாக, நபி (ஸல்) கூறுகின்றார்கள் :

"இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை தெளிவானது மற்றும் அனுமதிக்கப்பட்டவையும் தெளிவானது, அதைத்தவிர்த்து நாம் அறியாத நமக்கு சந்தேகத்திற்கு உரிய விசயங்களில் நாம் அதை தவிர்த்துக் கொள்ளல் நன்மையானது" என்பதை மிக தீர்க்கமாக அறிவித்துள்ளார்கள்.

சகோதரர்களே... யார் ஒருவர் இப்படிபட்ட விசயங்களை தங்களின் வாழ்கையில் பேணி நடக்கின்றார்களோ, அவர்கள் தங்களின் வாழ்நாளில் சிறந்த முஸ்லிமாக திகழ்வார்கள்.

Saturday, July 28, 2007

முஸ்லிம்களின் தேசப்பற்றைக் கண்டு மெய்சிலிர்த்த தினமலர்

"முஸ்லிம்களின் தேசப்பற்றைக் கண்டு மெய்சிலிர்த்த தினமலர்"


ஆம் சுதந்திர தின வைரவிழாவின் நெருக்கத்தில் தான் தினமலருக்கு இஸ்லாமியர்களின் சுதந்திர தாகம் எப்படிப்பட்டதாக இருந்தது என்ற ஞானோதயம் ஏற்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் தங்களின் சதவிதத்திற்கு மேலாக கலந்துக் கொண்டவர்களின் எழுச்சியைக் கண்டு தினமலர் மெய்சிலிந்த்து நிற்கும் காட்சியை கீழ்காணும் தினமலரின் வலைதளத்தில் காணலாம்.

http://www.dinamalar.com/2007july23/general_ind2.asp


நன்றி: தினமலர்

Sunday, July 08, 2007

இடஒதுக்கீடு கேட்டு கிடு கிடு போராட்டம்

ஜூலை 4 ல் முஸ்லிம்கள் நடத்திய இடஒதுக்கீடு போராட்டம் பற்றி ஜூனியர் விகடனில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் என்ற அமைப்பின் தலைவர் P.ஜைனுல் ஆபிதீனின் விளக்கமான பேட்டி கீழ் காணும் சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.

http://www.tntj.net/Statement/GV_PJ_petti_jul4.asp

Saturday, July 07, 2007

ஜூலை 4-ல் தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் சிறை நிரப்பும் போராட்டம்

ஜூலை 4 ல் தமிழ்நாட்டில் தவ்ஹீது ஜமாத் நடத்திய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம். அதில் ஏராளமான பெண்களும், சிறுவர், சிறுமியர்களும் கலந்துக் கொண்டதை கீழ் காணும் லிங்கில் காணுங்கள்.

அரபு நாடுகளில் தான் தங்களுக்கு வாழ்வு என்று எண்ணிக் கொண்டிருந்து முஸ்லிம்கள். இப்பொழுது அந்த மாயையிலிருந்து மீண்டு தங்களின் உரிமைக்காக தெருக்களில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்கள். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு என்றும் துணை நிற்பானாக...



http://www.tntj.net/Statement/July_4_Pager_News.asp


நன்றி: http://www.tntj.net/