Saturday, March 14, 2009

திருமறைக் குர்ஆன் கண்காட்சி

நாள்: 14 மார்ச் 2009.
சென்னை புரசைவாக்கம் சில்வர் ஸ்டார்ஸ் ஓட்டலில் இன்றும், நாளையும் திருக்குர்ஆன் கண்காட்சி நடக்கின்றது.


கண்காட்சியை பார்வையிடும் பெண்கள்


நன்றி: தமிழ் முரசு

Tuesday, March 10, 2009

சவுதி அரேபியாவின் தலைநகரம் ரியாத்தில் மண் புயல்

சவுதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் 10 மார்ச் 2009 அன்று மதியம் சுமார் 12 மணியளவில் மண் புயல் தோன்றியது. இதனால் ரியாத் மாநகரம் முழுவதும் ஆரஞ்ச் நிறமாக காட்சியளித்தது. இந்த புயலின் காரணமாக 70 இடங்களில் வாகனங்கள் மோதிக் கொண்டன. மதிய உணவிற்காக செல்ல வேண்டியவர்கள் ஏதும் செய்ய இயலாமல் தங்களது அலுவலகங்களிலேயே முடங்கினார்கள்.
விமானப் போக்குவரத்துக்கள் காலை 11 மணி முதல் மதியம் 2:30 வரை நிறுத்தப்பட்டது. அந்த நேரத்திற்கு வர வேண்டிய விமானங்களை தமாமிற்கு மாற்றிவிடப்பட்டது. அன்றைய பொழுது முழுவதும் ரியாத் நகரம் புழுதியில் மூழ்கியது.
உங்களின் பார்வைக்காக மண் புயல்.