Saturday, April 12, 2008

ஹிஜாப் தரும் சுதந்திரம்!

ஹிஜாப் தரும் சுதந்திரம்!

என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனக்கென்று சொந்தக் குரல்
எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் - அநாகரீகமா?
காட்ட மறுத்தால் - திணிப்பா?
சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே

கவலையும், துயரமும்
கோபமும், வேதனையும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை

அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை
ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை

உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே 'ஹிஜாப்'
அபயத்தை அளிக்கும் கவசமே 'அபாயா'
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!

நன்றி: மின் மடலின் மூலம் கிடைக்கப் பெற்றது.

Saturday, September 01, 2007

சிறந்த முஸ்லிம்

சகோதரர்களே!

நமது இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் நாம் கடைபிடிக்க வேண்டியவைகளாக் கீழ் கண்டவாறு கூறுகின்றார்கள்:

"நமது எல்லாச் செயல்களும், நம்முடைய எண்ணங்களைப் பொருத்தே அமையும்"

நம்முடைய எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் பட்சத்தில், நமது செயல்களும் தூய்மையாக இருக்கும். ஆகவே, சகோதரர்களே நம்முடைய எண்ணத்தை தூய்மையானதாக ஆக்குவோம்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

"நான் சொல்லாத ஒன்றை வழிபாடாகச் செய்யாதீர்கள்"

ஆம், பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களின் மேன்மையான வணக்கமாக கொள்வது இறைத்தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறாத ஒன்றை வழிபாடாக ஆக்கிக் கொண்டு வழி கெட்டு இஸ்லாத்திற்கு இழிவு ஏற்படுத்தும் செயலாக ஆக்கிக்கொண்டுள்ளனர்.

இறுதியாக, நபி (ஸல்) கூறுகின்றார்கள் :

"இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டவை தெளிவானது மற்றும் அனுமதிக்கப்பட்டவையும் தெளிவானது, அதைத்தவிர்த்து நாம் அறியாத நமக்கு சந்தேகத்திற்கு உரிய விசயங்களில் நாம் அதை தவிர்த்துக் கொள்ளல் நன்மையானது" என்பதை மிக தீர்க்கமாக அறிவித்துள்ளார்கள்.

சகோதரர்களே... யார் ஒருவர் இப்படிபட்ட விசயங்களை தங்களின் வாழ்கையில் பேணி நடக்கின்றார்களோ, அவர்கள் தங்களின் வாழ்நாளில் சிறந்த முஸ்லிமாக திகழ்வார்கள்.

Saturday, July 28, 2007

முஸ்லிம்களின் தேசப்பற்றைக் கண்டு மெய்சிலிர்த்த தினமலர்

"முஸ்லிம்களின் தேசப்பற்றைக் கண்டு மெய்சிலிர்த்த தினமலர்"


ஆம் சுதந்திர தின வைரவிழாவின் நெருக்கத்தில் தான் தினமலருக்கு இஸ்லாமியர்களின் சுதந்திர தாகம் எப்படிப்பட்டதாக இருந்தது என்ற ஞானோதயம் ஏற்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் தங்களின் சதவிதத்திற்கு மேலாக கலந்துக் கொண்டவர்களின் எழுச்சியைக் கண்டு தினமலர் மெய்சிலிந்த்து நிற்கும் காட்சியை கீழ்காணும் தினமலரின் வலைதளத்தில் காணலாம்.

http://www.dinamalar.com/2007july23/general_ind2.asp


நன்றி: தினமலர்

Sunday, July 08, 2007

இடஒதுக்கீடு கேட்டு கிடு கிடு போராட்டம்

ஜூலை 4 ல் முஸ்லிம்கள் நடத்திய இடஒதுக்கீடு போராட்டம் பற்றி ஜூனியர் விகடனில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் என்ற அமைப்பின் தலைவர் P.ஜைனுல் ஆபிதீனின் விளக்கமான பேட்டி கீழ் காணும் சுட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது.

http://www.tntj.net/Statement/GV_PJ_petti_jul4.asp

Saturday, July 07, 2007

ஜூலை 4-ல் தமிழ்நாட்டில் முஸ்லிம்களின் சிறை நிரப்பும் போராட்டம்

ஜூலை 4 ல் தமிழ்நாட்டில் தவ்ஹீது ஜமாத் நடத்திய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம். அதில் ஏராளமான பெண்களும், சிறுவர், சிறுமியர்களும் கலந்துக் கொண்டதை கீழ் காணும் லிங்கில் காணுங்கள்.

அரபு நாடுகளில் தான் தங்களுக்கு வாழ்வு என்று எண்ணிக் கொண்டிருந்து முஸ்லிம்கள். இப்பொழுது அந்த மாயையிலிருந்து மீண்டு தங்களின் உரிமைக்காக தெருக்களில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார்கள். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு என்றும் துணை நிற்பானாக...



http://www.tntj.net/Statement/July_4_Pager_News.asp


நன்றி: http://www.tntj.net/

Tuesday, April 04, 2006

ஒரு முஸ்லிமின் பார்வையில் ஓவியர் உசேன்

பிரபல ஓவியர் என்று சொல்லிக் கொள்ளும் எம்.எப். உசேன் என்பவர் இந்தியக் கடவுளர்களை நிர்வாணமாக்கி வரைந்து சில பேரிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார். இயற்கையைத் தவிர மற்றவற்றை ஓவியமாக வரைவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் இந்த வரம்புகளை அப்பட்டமாக மீறும் எம்.எப். உசேனை முஸ்லிம்கள் யாரும் ஆதரிப்பதில்லை. அப்படிச் சொல்வதை விட அவரை முற்றிலும் புறக்கணித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

உசேன் என்ற இந்தக் கிறுக்கனுக்கு எத்தனையோ அமைப்புகள் பட்டங்களை வழங்கி கவுரவித்துள்ளன. இப்படி பட்டம் கொடுத்த அமைப்புகளில் ஒரு அமைப்பு கூட இஸ்லாமிய அமைப்பு அல்ல என்பதை எல்லோரும் கவனிக்க வேண்டும். அதுபோல இவர் வரைந்த ஓவியங்களை முஸ்லிம்கள் அல்லாதவர்கள் தான் ஆயிரங்களையும், லட்சங்களையும் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வளவு ஏன்? எம்.எப். உசேனின் 'எக்ஸ்சிபிஷனு'க்கு முஸ்லிம் யாரும் செல்வதும் இல்லை. அவர் வரைந்த ஓவியங்களை கண்டு ரசிப்பதுமில்லை. இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆனாலும் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் எப்போதும் சீண்டிப் பார்க்கும் சங்பரிவாரம் - உசேனை ஒரு கருவியாக்கி முஸ்லிம்களை ஆத்திரமூட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியக் கடவுளர்களை இழிவுபடுத்தி ஓவியம் வரைந்த எம்.எப். உசேனை இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று அஜய் சிங் நருவி என்பவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நரேந்திர ஜெயின் உசேனுக்கு ஜாமீனில் வரக் கூடிய பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை உசேன் என்ற கிறுக்கனை ஓவியம் வரையாமல் தடுக்க வேண்டும். இதை அவர் மீறினால் அதற்கான தண்டனையை வழங்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால் உசேனை ஆதரிப்பவர்கள் கோவில்களில் இல்லாத ஒன்றை உசேன் வரையவில்லை. சிற்பமாக காட்சியளிக்கும் ஒன்றை ஓவியமாக வரைவதை ஜனநாயகத்தில் தடுக்க முடியாதே! என்கிறார்கள். இவர்களுக்கு தக்க பதிலளிப்பது யாரோ?

நன்றி: உணர்வு வார இதழ்.

நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியுமா?

"ஒரு மூமின் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு ரக்அத் தொழுது அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு... சூராவை 25 தடவை ஓதிவிட்டு, பின்பு ஸலாம் கொடுத்து விட்டு 'ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி' என்று ஆயிரம் தடவை கூறினால் அன்றைய இரவில் கனவில் என்னை நிச்சயமாக காண்பான். மறுவாரம் வெள்ளி வரும் முன் கனவில் என்னைக் காண்பான். என்னை ஒரு வாரம் பார்த்துவிட்டால் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்."

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஒரு செய்தியை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது 'அல்மவ்ளூஆத்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரென்றே அறியப்படாதவர்கள் அறிமுகமற்ற பலர் இடம் பெறுவதிலிருந்தே இது பலவீனமான செய்தி தான் என்பது புலனாகும்.

நபி(ஸல்) அவர்களை கனவில் நாம் காண முடியுமா? காண முடியும் என்பதற்கு சிலர் கீழ்க்கண்ட ஹதீஸ்களை ஆதாரமாக வைக்கின்றனர்.

"யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

யார் என்னைக் காண்கிறானோ அவன் உண்மையையே கண்டான் என்று நபி(ஸல்) கூறியதாக அபூகதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத்.

இந்த ஹதீஸ்கள் மேலெழுந்த வாயாகப் பார்க்கும் போது நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியும் என்று தெரிந்தாலும், உண்மையில் நபி(ஸல்) அவர்களை கனவில் காண வேண்டுமானால் அவர்கள் உயிருடன் இருக்கும் போது கனவில் காண்பவர் நபி(ஸல்) அவர்களைத் தான் கண்டு கொண்டார் என்றும் அல்லது இதுவரை நேரில் காணாதவர், கனவின் மூலம் கண்டால் இனி நேரிலும் காண்பார் என்றும் தான் முடிவுக்கு வரவேண்டும். "இந்த முடிவு தான் மேற்கொள்ள வேண்டும்" என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

'யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் (நேரிலும்) விழிப்பிலும் என்னைக் காண்பார். ஏனென்றால் ஷைத்தான் என் வடிவத்தில் வரமாட்டான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்.

கனவில் கண்டால் நேரிலும் காண்பார் என்றால், நேரில் காண்பது அவர்கள் உயிருடன் உள்ள காலத்திலேயே பொருந்தும். தெளிவான ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மூலம் அவர்கள் உயிருடன் வசிக்காத காலத்தில் உள்ள நம்மைப் போன்றவர்களால் நபி(ஸல்) அவர்களைக் காண முடியாது என்பது தெளிவாகிறது.

நன்றி: ஏ1ரியலிசம்.காம்

Wednesday, February 22, 2006

கொன்றால் பாவம்; தின்றால் போச்சு



திங்கிறதுக்காக கொல்லும் போது... கொய்யோ,மொய்யோன்னு கத்துனக் கூட்டம் - இப்ப
திங்கக்கூடாதென்பதற்காக கொல்லுறாங்களே... எங்கேய்யா போச்சு அந்தக் கூட்டம்?

உயிரை வதைப்பது பாவம் - இப்ப
அதுதான் எல்லோருக்கும் நலம்.

கொல்லக் கொல்ல மற்றும் கொல்லாமலே அழியும் - அது வன விலங்கினம்
கொல்லக் கொல்ல உருவாகும் - அது மனிதனுக்கு உணவாகும் இனம்.