பிரபல ஓவியர் என்று சொல்லிக் கொள்ளும் எம்.எப். உசேன் என்பவர் இந்தியக் கடவுளர்களை நிர்வாணமாக்கி வரைந்து சில பேரிடம் வாங்கிக் கட்டிக் கொள்கிறார். இயற்கையைத் தவிர மற்றவற்றை ஓவியமாக வரைவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் இந்த வரம்புகளை அப்பட்டமாக மீறும் எம்.எப். உசேனை முஸ்லிம்கள் யாரும் ஆதரிப்பதில்லை. அப்படிச் சொல்வதை விட அவரை முற்றிலும் புறக்கணித்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
உசேன் என்ற இந்தக் கிறுக்கனுக்கு எத்தனையோ அமைப்புகள் பட்டங்களை வழங்கி கவுரவித்துள்ளன. இப்படி பட்டம் கொடுத்த அமைப்புகளில் ஒரு அமைப்பு கூட இஸ்லாமிய அமைப்பு அல்ல என்பதை எல்லோரும் கவனிக்க வேண்டும். அதுபோல இவர் வரைந்த ஓவியங்களை முஸ்லிம்கள் அல்லாதவர்கள் தான் ஆயிரங்களையும், லட்சங்களையும் கொடுத்து வாங்கிச் செல்கிறார்கள். என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வளவு ஏன்? எம்.எப். உசேனின் 'எக்ஸ்சிபிஷனு'க்கு முஸ்லிம் யாரும் செல்வதும் இல்லை. அவர் வரைந்த ஓவியங்களை கண்டு ரசிப்பதுமில்லை. இதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆனாலும் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் எப்போதும் சீண்டிப் பார்க்கும் சங்பரிவாரம் - உசேனை ஒரு கருவியாக்கி முஸ்லிம்களை ஆத்திரமூட்டி வருகிறது. இந்நிலையில் இந்தியக் கடவுளர்களை இழிவுபடுத்தி ஓவியம் வரைந்த எம்.எப். உசேனை இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று அஜய் சிங் நருவி என்பவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நரேந்திர ஜெயின் உசேனுக்கு ஜாமீனில் வரக் கூடிய பிடிவாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
முஸ்லிம்களைப் பொறுத்தவரை உசேன் என்ற கிறுக்கனை ஓவியம் வரையாமல் தடுக்க வேண்டும். இதை அவர் மீறினால் அதற்கான தண்டனையை வழங்க வேண்டும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. ஆனால் உசேனை ஆதரிப்பவர்கள் கோவில்களில் இல்லாத ஒன்றை உசேன் வரையவில்லை. சிற்பமாக காட்சியளிக்கும் ஒன்றை ஓவியமாக வரைவதை ஜனநாயகத்தில் தடுக்க முடியாதே! என்கிறார்கள். இவர்களுக்கு தக்க பதிலளிப்பது யாரோ?
நன்றி: உணர்வு வார இதழ்.
Tuesday, April 04, 2006
ஒரு முஸ்லிமின் பார்வையில் ஓவியர் உசேன்
Subscribe to:
Post Comments (Atom)


9 comments:
1. Neengal sonneerkal, yentha oru muslimum Husenai aatharippathillai. Anal neengal vakkalathu vaangareena appa neenga musilim illaiya..
2. Hindu mathathil kurai irunthal oru hindu suttikattatum neenga yen thalaiyidukreerkal. Aduthavarkal ungal mathathil ulla kuraikalai sutti kattinal nallairukkuma.... Ungal mathathil aduthavarkalai kindal seyya solli irukkiratha.
3. Antha Nai Husen oru manithanillai. Pirappal oru panni (pig). Avanukku oru Vakkalathu
"இயற்கையைத் தவிர மற்றவற்றை ஓவியமாக வரைவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது."
அதாவது இஸ்லாத்தில் கலைக்கு இடமில்லை.
"இயற்கையைத் தவிர மற்றவற்றை ஓவியமாக வரைவது இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது."
அதாவது இஸ்லாத்தில் கலைக்கு இடமில்லை.
அப்படிப் போடு
*//அதாவது இஸ்லாத்தில் கலைக்கு இடமில்லை.//*
அப்படி என்று யார் சொன்னது நீங்கள் வத்திருக்ககூடிய அல்லது வரையக்கூடிய
உருவங்கள் வணங்கக்கூடியதாக இரூக்கக்கூடாது.
இதற்க்கு கீழ்கண்ட ஹதீசையும் வைத்து பொருள் கொண்டால் நன்ராயிருக்கும்
ஜிப்ரியல் (அலை) அவ்ர்கள் நபி (ஸல்) அவ்ர்களை சந்திக்க வருகிறார்
அப்போது நபியவர்களின் வீட்டில் உள்ள திரைசீலையில் உருவம் இருப்பதைகண்டு அதை பலர்பார்க்கும் விதமாக கால்மிதியாகவோ அல்லது அதைப்போலோ இடவலியுருத்துகிறார்கள்.
Nanbare, migavum nandraga irundhahu, Ennaku nedu natkalai thondrukindra oru visayam....
Neengal ninanithal, oru adi eduthu vaithaal, ellai thaandiya bayangaravaadham kuraiyumillaiya? Matra mathathinarukkaga vendaam, ellai thaandiya bayangaravaathathil maandu pona muslim nanbargalin ennikayai pakistan mada gurumargalukku eduthu chendral, matra uyirgalaiyum nesikaa sonna nabigalin kuranai padipavarkal nam naataiyum sedham seiyaamal irukalame.... seiveeraa?
test
Hindu Mathathil Sirpangal erupadal dan Hussain varaigiral enbadanal adu seri endral, muslim madathil allow panni erupudu pol oru male ethanai perai vendumanalum kalyanam panni kollalama. Yen enda corrupted mind ungaluku.
சிற்பமாக காட்சியளிக்கும் ஒன்றை ஓவியமாக வரைவதை ஜனநாயகத்தில் தடுக்க முடியாதே! என்கிறார்கள்.
---------------------------------
அவர் ஒவியம் தீட்டுகிறார். சிலைகளில் உள்ளதை அப்படியே வரைவதில்லை. கருத்துரிமையை
மதிக்காத தஸ்லிமாவை வெளியேற்று,
ருஷ்டியை இந்தியாவிற்குள் விடாதே
என்று ஆர்ப்பாட்டம் செய்யும் முஸ்லீம்கள் இதை கேட்பது
நியாயமற்றது. இந்துக்கள் உணர்வினை புண்படுத்தினால் எங்களுக்கு சம்மதம் என்கிறீர்கள்.
Post a Comment