Monday, June 23, 2008

நற்பண்புகள் - 1

"தனக்கு விருப்பமான ஒன்றையே மற்றவர்களுக்கும் விரும்புங்கள்"

மக்களில் பெரும்பாலோரிடத்தில் உதவி மனப்பான்மை குறைந்துக் கொண்டே வருகின்றது. இதன் விளைவாகத்தான் இப்பொழுது உலகமெல்லாம் வட்டி தொழில் தலை விரித்தாடுகின்றது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கொடுத்து உதவிக் கொண்டால் உலகில் பல பிரச்னைகளுக்கான தீர்வு தானாகவே ஏற்பட்டுவிடும். ஒருவர் மற்றவருக்கு உதவிடும் செயலை திருமறைக் குர்ஆன் கீழ்கண்டவாறு கூறுகின்றது.


நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2 : 267)

உதவி மற்றும் தர்மம் செய்கின்றோம் என்றப் பெயரில் கொடுக்கின்ற ஒன்றானது எவ்வாறு இருக்கிறது என்றால், அது அவர்களுக்கு தேவையற்றதும், தங்களிடம் இருப்பதால் அது சுமையாகவும் உள்ள ஒன்றைத்தான் உதவியாகவும், தருமமாகவும் பிறருக்கு வழங்க முன் வருகின்றனர். இதைப் போன்ற ஒரு செயல்தான் சுனாமி ஏற்பட்ட போது பெரும்பாலான மக்கள் வழங்கிய ஆடைகள் துர்நாற்றம் அடிக்கக்கூடியதாகவும், கிழிசல்கள் உடையதாகவும் இருக்கக் கண்டோம். இப்படிப்பட்ட செயலைத்தான் திருமறைக் குர்ஆன் கண்டிக்கின்றது.

தாம் உதவியாகவோ அல்லது தர்மமாகவோ கொடுக்க நாடிய ஒன்று அது தமக்கு விருப்பமான ஒன்றாக இருக்க வேண்டும், அதையே நாம் பிறருக்கு கொடுக்க வேண்டும் என திருமறைக் குர்ஆன் அறிவுருத்துகின்றது.

ஆம். வாருங்கள் சகோதரர்களே! நமக்கு விருப்பமான ஒன்றையே மற்றவர்களுக்கு வழங்கிடுவோம். நம் அன்பை மேன்மேலும் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வோம்.

நன்றி.

0 comments: